Saturday, February 07, 2015

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கருவிழி, கைரேகை, பதிவு, புகைப்படம் எடுப்பதற்கான நிரந்தர மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் மாவட்டத்தில் 20 மையங்கள் செயல்படுகின்றன.
இதுதவிர மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நிரந்தர பதிவு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுத்தநகல் பிரிவு அருகே உள்ள அறை (பழைய பாஸ்போர்ட்டு பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிரந்தர தேசிய மக்கள் தொகை பதிவு மையத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிரந்தர பதிவு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment