Saturday, February 07, 2015

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கருவிழி, கைரேகை, பதிவு, புகைப்படம் எடுப்பதற்கான நிரந்தர மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் மாவட்டத்தில் 20 மையங்கள் செயல்படுகின்றன.
இதுதவிர மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நிரந்தர பதிவு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுத்தநகல் பிரிவு அருகே உள்ள அறை (பழைய பாஸ்போர்ட்டு பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிரந்தர தேசிய மக்கள் தொகை பதிவு மையத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிரந்தர பதிவு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment