Saturday, February 07, 2015

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கருவிழி, கைரேகை, பதிவு, புகைப்படம் எடுப்பதற்கான நிரந்தர மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் மாவட்டத்தில் 20 மையங்கள் செயல்படுகின்றன.
இதுதவிர மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நிரந்தர பதிவு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுத்தநகல் பிரிவு அருகே உள்ள அறை (பழைய பாஸ்போர்ட்டு பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிரந்தர தேசிய மக்கள் தொகை பதிவு மையத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிரந்தர பதிவு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
0 comments:
Post a Comment