Saturday, February 07, 2015

‘தேரா சச்சா தேவா’ என்ற அமைப்பின் தலைவர் குர்மீத்ராம் ரகீம்சிங். இவர் சமூக சேவைகள் செய்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ என்ற படத்தில் சீக்கியர்களின் குருவான குருகோவிந்த் சிங் போன்று உடையணிந்து, சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதனால் பஞ்சாப், அரியானாவில் சில அமைப்புகள் இப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. பின்னர் மேல்முறையீடு மூலம் படத்துக்கு தணிக்கை வழங்கப்பட்டது. இத்திரைப் படம் வருகிற 13–ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் சாமியார் குர்மீத்ராம் ரகீம்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘‘இளைஞர்கள் நிறைய பேர் சினிமா பார்ப்பதிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான சினிமா படங்கள், தீய கருத்துக்களையே மக்கள் மனதில் புகுத்துகின்றன.
எனவே சினிமா மூலமாக சிறந்த கருத்துக்களை எடுத்து கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஜெர்மனி, லத்தீன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் பழங்குடியின மக்களை பற்றிய சினிமாவில் நடித்து வருகிறேன். அந்த திரைப்படத்துக்கான 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment