Saturday, February 07, 2015

‘தேரா சச்சா தேவா’ என்ற அமைப்பின் தலைவர் குர்மீத்ராம் ரகீம்சிங். இவர் சமூக சேவைகள் செய்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ என்ற படத்தில் சீக்கியர்களின் குருவான குருகோவிந்த் சிங் போன்று உடையணிந்து, சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதனால் பஞ்சாப், அரியானாவில் சில அமைப்புகள் இப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. பின்னர் மேல்முறையீடு மூலம் படத்துக்கு தணிக்கை வழங்கப்பட்டது. இத்திரைப் படம் வருகிற 13–ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் சாமியார் குர்மீத்ராம் ரகீம்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘‘இளைஞர்கள் நிறைய பேர் சினிமா பார்ப்பதிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான சினிமா படங்கள், தீய கருத்துக்களையே மக்கள் மனதில் புகுத்துகின்றன.
எனவே சினிமா மூலமாக சிறந்த கருத்துக்களை எடுத்து கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஜெர்மனி, லத்தீன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் பழங்குடியின மக்களை பற்றிய சினிமாவில் நடித்து வருகிறேன். அந்த திரைப்படத்துக்கான 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
0 comments:
Post a Comment