Saturday, February 07, 2015

‘தேரா சச்சா தேவா’ என்ற அமைப்பின் தலைவர் குர்மீத்ராம் ரகீம்சிங். இவர் சமூக சேவைகள் செய்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ என்ற படத்தில் சீக்கியர்களின் குருவான குருகோவிந்த் சிங் போன்று உடையணிந்து, சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதனால் பஞ்சாப், அரியானாவில் சில அமைப்புகள் இப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. பின்னர் மேல்முறையீடு மூலம் படத்துக்கு தணிக்கை வழங்கப்பட்டது. இத்திரைப் படம் வருகிற 13–ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் சாமியார் குர்மீத்ராம் ரகீம்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘‘இளைஞர்கள் நிறைய பேர் சினிமா பார்ப்பதிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான சினிமா படங்கள், தீய கருத்துக்களையே மக்கள் மனதில் புகுத்துகின்றன.
எனவே சினிமா மூலமாக சிறந்த கருத்துக்களை எடுத்து கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஜெர்மனி, லத்தீன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் பழங்குடியின மக்களை பற்றிய சினிமாவில் நடித்து வருகிறேன். அந்த திரைப்படத்துக்கான 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment