Tuesday, February 17, 2015
குடிமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராகி வரும் சின்னவெங்காயம் விலை உயர்வை எதிர்பார்க்கும் விவசாயிகள்
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் விலை உயர்வை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குடிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மக்காச்சோளம் மட்டுமின்றி கிணற்று பாசனம் மூலம் சின்னவெங்காயம் சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்னவெங்காயம் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொங்கல் நகரம், குடிமங்கலம், இலுப்பநகரம், பெதப்பம்பட்டி, அணிக்கடவு பூளவாடி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்த பகுதிகளில் சின்னவெங்காயம் விலை உயர்வை எதிர்பார்த்து விளை நிலங்களில் வெங்காய பட்டறைகள் அமைத்து இருப்பு வைத்து விற்பனை செய்தும் வருகின்றனர்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை இங்கு விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 35 நாட்களுக்கு பிறகு அதனை தனியாக பிரித்து நடவு செய்தும் மற்ற மாதங்களில் முழு வெங்காயமாக நடவு செய்தும் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி கோபிநாதன் கூறியதாவது:–
சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு 1¼ கிலோ விதை தேவைப்படுகிறது. 1 கிலோ விதை ரூ.3 ஆயிரத்து 500–க்கு வாங்கி சாகுபடி செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு பாத்தி அமைக்க ரூ.2 ஆயிரமும், நடவு செய்ய ரூ.4 ஆயிரமும், மருந்து தெளிக்க ரூ.7ஆயிரமும், களைஎடுக்க ரூ.4ஆயிரமும், உரமிடுதல் ரூ.8 ஆயிரமும் மற்றும் அறுவடைக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.22 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...

0 comments:
Post a Comment