Thursday, February 05, 2015
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச்சட்டம் 2014 நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அதன்படி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாநிலத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, மதுசூதனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
அதைதொடர்ந்து விவசாயிகள் சட்ட நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் இருந்த சட்ட நகல்களை பறித்தனர். உடனே விவசாயிகள் சட்டநகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment