Thursday, February 05, 2015
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச்சட்டம் 2014 நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அதன்படி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாநிலத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, மதுசூதனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
அதைதொடர்ந்து விவசாயிகள் சட்ட நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் இருந்த சட்ட நகல்களை பறித்தனர். உடனே விவசாயிகள் சட்டநகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment