Thursday, February 05, 2015
குண்டடம் அருகே உள்ள கொக்கம்பாளையம் பகுதியில் கடந்த 31–ந்தேதி அன்று அதிகாலை ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மறித்து விசாரிக்க முயன்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடினர். போலீசார் அவர்களை துரத்திச்சென்ற போது மிளகாய் பொடியை வீசி தப்பிச்சென்றுவிட்டனர். அவர்கள் ஓட்டிவந்த பைக்கில் இரும்பு கட்டர், கட்டிங் பிளேயர், இரும்பு வளையம் போட்ட தடி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததை வைத்து அவர்கள் கொள்ளையர்கள் என்பது தெரிந்ததால் அவர்களை பிடிக்க குண்டடம் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை கோவை தாராபுரம் ரோட்டில் மேட்டுக்கடை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற ஒருவரைப்பிடித்து விசாரித்தபோது அவர் போலீஸ்காரர் மீது மிளகாய் பொடியை வீசிவிட்டு தப்பிய ஆசாமி என்பது தெரியவந்தது. அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்லடத்தை அடுத்துள்ள பூராண்டாம்பாளையத்தைச்சேர்ந்த சுப்பிரமணி(45) என்பதும், தற்போது அவர் அவினாசி அடுத்துள்ள வஞ்சிபாளையத்தில் குத்தகைத்தோட்டம் பார்த்து வருவதும் தெரிந்தது. தப்பியோடிய மற்ற 2 பேர் சுப்பிரமணியின் அண்ணன் ரத்தினசாமி(47), அவரது மகன் மணிகண்டன்(19) என்பதும் தெரிந்தது. இவர்கள் இதற்கு முன்பு பல இடங்களில் மோட்டார், கேபிள், காற்றாலை கேபிள், டிராக்டர் ரொட்டாவெட்டர் ஆகியவற்றை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment