Thursday, February 05, 2015
குண்டடம் அருகே உள்ள கொக்கம்பாளையம் பகுதியில் கடந்த 31–ந்தேதி அன்று அதிகாலை ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மறித்து விசாரிக்க முயன்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடினர். போலீசார் அவர்களை துரத்திச்சென்ற போது மிளகாய் பொடியை வீசி தப்பிச்சென்றுவிட்டனர். அவர்கள் ஓட்டிவந்த பைக்கில் இரும்பு கட்டர், கட்டிங் பிளேயர், இரும்பு வளையம் போட்ட தடி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததை வைத்து அவர்கள் கொள்ளையர்கள் என்பது தெரிந்ததால் அவர்களை பிடிக்க குண்டடம் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை கோவை தாராபுரம் ரோட்டில் மேட்டுக்கடை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற ஒருவரைப்பிடித்து விசாரித்தபோது அவர் போலீஸ்காரர் மீது மிளகாய் பொடியை வீசிவிட்டு தப்பிய ஆசாமி என்பது தெரியவந்தது. அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்லடத்தை அடுத்துள்ள பூராண்டாம்பாளையத்தைச்சேர்ந்த சுப்பிரமணி(45) என்பதும், தற்போது அவர் அவினாசி அடுத்துள்ள வஞ்சிபாளையத்தில் குத்தகைத்தோட்டம் பார்த்து வருவதும் தெரிந்தது. தப்பியோடிய மற்ற 2 பேர் சுப்பிரமணியின் அண்ணன் ரத்தினசாமி(47), அவரது மகன் மணிகண்டன்(19) என்பதும் தெரிந்தது. இவர்கள் இதற்கு முன்பு பல இடங்களில் மோட்டார், கேபிள், காற்றாலை கேபிள், டிராக்டர் ரொட்டாவெட்டர் ஆகியவற்றை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment