Wednesday, February 04, 2015

மதுரை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக இருப்பது வைகை அணை. இங்கிருந்து எடுக்கும் தண்ணீர், பண்ணைப்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதில் மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கும், 600 தெருக் குழாய்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர 22 லாரிகள் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் பருவமழை போதிய அளவுக்கு இல்லாத காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. மேலும், மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரும் வறண்டுபோனது. இதனால், கோடையின்போது கடும் தட்டுப்பாட்டு நிலவியது.
இதைச் சமாளிக்க பல்வேறு இடங்களிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலமாக மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்தது. நடப்பு ஆண்டில் சராசரியையொட்டி மழை பெய்திருந்தாலும், வரும் கோடையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் தற்போதைய நிலவரப்படி, மாநகராட்சிப் பகுதிக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியது:
நடப்பு ஆண்டில் பெய்த பருவமழை, முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீர் வரத்தாலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை வைகை அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு மேல் இருந்தது. மதுரை மாநகராட்சிப் பகுதியின் குடிநீர்த் தேவைக்காக தினமும் 122 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதில் 115 மில்லியன் லிட்டர் மாநகராட்சிப் பகுதிக்கும், 7 மில்லியன் லிட்டர் சேடப்பட்டி குடிநீர்த் திட்டத்துக்கும் வழங்கப்படுகிறது. இதே அளவில் தண்ணீர் எடுக்கும்பட்சத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளித்துவிடலாம் என எதிர்பார்த்தோம்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக
1,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை நிலவரப்படி 37.76 அடியாகக் குறைந்துவிட்டது.
இதேநிலை தொடர்ந்தால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும். கோடையில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொது...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
0 comments:
Post a Comment