Sunday, February 08, 2015

தமிழகத்தில் 38 ஆயிரத்து 500 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் கோயில் உண்டியல் கொள்ளை மட்டுமின்றி, அம்மன் சிலைகளில் தாலி மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
இது போன்ற கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளனர். கோயில் செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்ப டும். தமிழகத்தில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் இப்பணி நடந்து வருகிறது. மேலும் ஏற்கனவே பழுதாகி இருக்கும் கேமராக்களையும் பழுதுபார்க்கும்படி அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களின் கண்ட்ரோல் அனைத்தும் உதவி ஆணையர், செயல் அலுவலர் அறையில் இருக்கும். அவர்கள் பணி செய்து கொண்டே கோயிலுக்கு வரும் நபர்களை கண்காணிக்க முடியும். கோயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த கேமராக்கள் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மேலும் இரவு காவலர் இல்லாத கோயில்களில் முன்னாள் படைவீரர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
0 comments:
Post a Comment