Sunday, February 08, 2015

தமிழகத்தில் 38 ஆயிரத்து 500 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் கோயில் உண்டியல் கொள்ளை மட்டுமின்றி, அம்மன் சிலைகளில் தாலி மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
இது போன்ற கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளனர். கோயில் செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்ப டும். தமிழகத்தில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் இப்பணி நடந்து வருகிறது. மேலும் ஏற்கனவே பழுதாகி இருக்கும் கேமராக்களையும் பழுதுபார்க்கும்படி அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களின் கண்ட்ரோல் அனைத்தும் உதவி ஆணையர், செயல் அலுவலர் அறையில் இருக்கும். அவர்கள் பணி செய்து கொண்டே கோயிலுக்கு வரும் நபர்களை கண்காணிக்க முடியும். கோயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த கேமராக்கள் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மேலும் இரவு காவலர் இல்லாத கோயில்களில் முன்னாள் படைவீரர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment