Sunday, February 08, 2015

நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர் சார்பில் மும்பை பாபா அணுசக்தி மையத்தின் இயக்குநர் சேகர்பாசுவின் பதில் மனுவை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
நியூட்ரினோ மையம் அமைக்க நாட்டில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதியில் தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் அமைக்க முடிவானது. இந்த ஆய்வு மையம் அமைப்பதற்கு, ஆயிரம் மீட்டர் சுற்றளவில் பாறை இருக்க வேண்டும். அந்த வகையில் பொட்டிப்புரம்தான் தகுதியான இடம். இங்கு 1910 மீட்டர் நீளத்துக்கு பாறையில் குகை அமைக்க முடியும். இந்த இடத்தின் அருகே அடர்ந்த வனம் இல்லை. விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இத்திட்டத்தால் சிறிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆய்வகம் அமைக்க 26.82.5 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு தந்துள்ளது. இதனால் தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டியதில்லை.
மனு தாரர் கூறுவதுபோல் ஆய்வகம் அமைக்க ஆயிரம் டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப் போவதில்லை. வெறும் 450 டன் வெடி பொருள் மட்டுமே பயன்படுத்தப்படும். 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்குதான் பாறைகள் வெட்டி எடுக்கப்படும். இப்பணிகள் 3 ஆண்டில் முடிவடையும்.
இந்திய நில அதிர்வு பகுதி களின் வரைபடத்தில் ஆய்வகம் அமையும் பகுதி இல்லை. திறந்த வெளியில் உள்ள பிரபஞ்சக் கதிர்களால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆய்வகம் குகைக் குள் அமைக்கப்படுகிறது. நீரோட்டம் பாதிக்கப்படாது, மாசு அடையாது. நீரில் கதிர் வீச்சு ஏற்படாது. ஆய்வகம் அமையும் பாறை கடினத்தன்மை கொண்ட செர்னோகைட் வகையைச் சேர்ந்தது.
இதனால் இந்த வகையிலான பாறையில் நீரோட்டம் இருக்காது. நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு இந்த ஆய்வகம் பெரியளவில் உதவியாக இருக்கும். நியூட்ரினோ ஆய்வகத்தால் பாதிப்பு ஏற்படாது. மனிதகுலத்துக்கு நன்மை ஏற்படுத்தும். எனவே, வைகோ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மனுவுக்கு தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்கவும், மத்திய அரசு மனுவுக்குப் பதில் அளிக்க வைகோவுக்கு அனுமதி வழங்கியும் அடுத்த விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment