Friday, February 06, 2015
அம்மான்,
விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் அரபு நாடான ஜோர்டானும் இணைந்து களமிறங்கி உள்ளது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம், ஜோர்டான் போர் விமானி லெப்டினன்ட் மூவாத் அல் கசாஸ்பே (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்ற எப்-16 ரக போர் விமானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயக்கைதியாக பிடித்துச் சென்றனர்.
மூவாத்தை விடுவிக்க, ஜோர்டானின் பிடியில் இருந்த பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கெடு விதித்தனர். இதை நிறைவேற்ற தயாராக இருந்தபோதும், தங்களது போர் விமானியை உயிரோடு வைத்திருப்பதை நிரூபிக்கும் சான்று வேண்டும் என்று தீவிரவாதிகளிடம் ஜோர்டான் கோரியது. ஆனால் தீவிரவாதிகள் அப்படி ஏதும் தரவில்லை.
இந்த நிலையில், ஜோர்டான் போர் விமானி மூவாத் அல் கசாஸ்பேயை தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி ஒரு உலோகக் கூண்டில் வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இது தொடர்பாக இப்போது வெளியான வீடியோ, ஜோர்டானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்கக்கோரிய பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியும், மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலியும், ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள சவாகா சிறையில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே தூக்கில் போடப்பட்டனர். இதன்மூலம் தனது விமானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஜோர்டான் பழி தீர்த்தது. பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவிக்கு அம்மானில் 2005-ம் ஆண்டு 60 பேர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலிக்கு, 2008-ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள ஜோர்டான் மக்களை கொல்ல சதி செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது இவர்கள் இருவரையும் ஜோர்டான் தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது, விமானி அதிகபெண்களை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் அரபு நாடான ஜோர்டானும் இணைந்து களமிறங்கி உள்ளது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம், ஜோர்டான் போர் விமானி லெப்டினன்ட் மூவாத் அல் கசாஸ்பே (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்ற எப்-16 ரக போர் விமானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயக்கைதியாக பிடித்துச் சென்றனர்.
மூவாத்தை விடுவிக்க, ஜோர்டானின் பிடியில் இருந்த பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கெடு விதித்தனர். இதை நிறைவேற்ற தயாராக இருந்தபோதும், தங்களது போர் விமானியை உயிரோடு வைத்திருப்பதை நிரூபிக்கும் சான்று வேண்டும் என்று தீவிரவாதிகளிடம் ஜோர்டான் கோரியது. ஆனால் தீவிரவாதிகள் அப்படி ஏதும் தரவில்லை.
இந்த நிலையில், ஜோர்டான் போர் விமானி மூவாத் அல் கசாஸ்பேயை தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி ஒரு உலோகக் கூண்டில் வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இது தொடர்பாக இப்போது வெளியான வீடியோ, ஜோர்டானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்கக்கோரிய பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியும், மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலியும், ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள சவாகா சிறையில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே தூக்கில் போடப்பட்டனர். இதன்மூலம் தனது விமானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஜோர்டான் பழி தீர்த்தது. பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவிக்கு அம்மானில் 2005-ம் ஆண்டு 60 பேர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலிக்கு, 2008-ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள ஜோர்டான் மக்களை கொல்ல சதி செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது இவர்கள் இருவரையும் ஜோர்டான் தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது, விமானி அதிகபெண்களை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment