Saturday, March 07, 2015
உடுமலையில் மாற்றுத்திறனாளி மாணவி உள்பட 4 ஆயிரத்து 446 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.
தமிழ் நாட்டில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. பிளஸ்–2 தேர்வுக்காக உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த 14 தேர்வு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 496 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி சீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டிருந்தது. இதில் பள்ளிகளில் அல்லாமல் தனியாக படித்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு 114 மாணவ– மாணவிகளுக்கு ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 மையங்களிலும் சேர்த்து மொத்த 4 ஆயிரத்து 446 மாணவ–மாணவிகள் எழுதினர். மொத்தம் 50 மாணவ–மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி (எஸ்.கே.பி.பள்ளி) தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.கிருஷ்ணவேணி, வேறு அரசு பள்ளி ஆசிரியரின் உதவியுடன் தேர்வில் பங்கேற்றார்.மாணவி கிருஷ்ணவேணி அதிக நேரம் தொடர்ந்து எழுத இயலாத மாற்றுத்திறனாளி என்பதால் அவர் சொல்கிற விடையை எழுதுவதற்கு அவர் படிக்கும் பள்ளி ஆசிரியரல்லாத வேறு பள்ளி ஆசிரியர் ஒருவரை பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதன்படி வினாவிற்கான விடையை அந்த மாணவி கிருஷ்ணவேணி சொல்ல, சொல்ல அதை எழுதுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த ஆசிரியர் விடைத்தாளில் எழுதினார்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு நிலையான பறக்கும் படை அலுவலர் மற்றும் 2 பறக்கும் படை அலுவலர்கள், தேர்வறை கண்காணிப்பாளர், துறை அலுவலர், முதன்மை கண் காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களுக்கு வினா மற்றும் விடைத்தாள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும், பின்னர் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை சேகரித்து திருப்பூருக்கு கொண்டு சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் ஒப்படைக்கவும் 3 பிரிவுகளாக வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment