Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசிணம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் ரூ.19½ லட்சம் மதிப்பில் ராக்கியாவலசு–புளியம்பட்டி இடையே புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஈரோடு எம்.பி.செல்வக்குமார சின்னையன் தலைமையில் தாராபுரம் எம்.எம்.ஏ.பொன்னுச்சாமி இதை தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. மூலனூர் ஒன்றிய செயலாளர் வி.பி.பெரியசாமி, அதிபர் சண்முகம், மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலையரசி, தாராபுரம் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கம், எரசினம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

0 comments: