Tuesday, March 24, 2015
பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 19ஆவது வார்டு, நெருப்பெரிச்சல், ஜி.என்.கார்டன், தோட்டத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந் நிலையில், அப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருவதாக அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
எனினும், குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வந்ததை அடுத்து ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது என்று வலியுறுத்தி, மாநகராட்சி செயற்பொறியாளர் ரவியிடம் மனு அளித்தனர்.
மனு விவரம்: பூலுவப்பட்டி, ஐஸ்வர்யா நகர் பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டியதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. தற்போது நீர்நிரம்பிய நிலையில் உள்ள நெருப்பெரிச்சல் பகுதி பாறைக் குழியில், மாநகர்ப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவு கொட்டப்படுகிறது. இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
உடனடியாக நெருப்பெரிச்சல் பகுதியிலுள்ள பாறைக்குழியில் குப்பை கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக மேயர், ஆணையரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment