Tuesday, March 24, 2015
பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 19ஆவது வார்டு, நெருப்பெரிச்சல், ஜி.என்.கார்டன், தோட்டத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந் நிலையில், அப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருவதாக அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
எனினும், குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வந்ததை அடுத்து ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது என்று வலியுறுத்தி, மாநகராட்சி செயற்பொறியாளர் ரவியிடம் மனு அளித்தனர்.
மனு விவரம்: பூலுவப்பட்டி, ஐஸ்வர்யா நகர் பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டியதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. தற்போது நீர்நிரம்பிய நிலையில் உள்ள நெருப்பெரிச்சல் பகுதி பாறைக் குழியில், மாநகர்ப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவு கொட்டப்படுகிறது. இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
உடனடியாக நெருப்பெரிச்சல் பகுதியிலுள்ள பாறைக்குழியில் குப்பை கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக மேயர், ஆணையரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment