Tuesday, March 24, 2015
தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், அரசின் ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக, எரிவாயு உருளை விநியோகிப்புத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,500 வழங்க தொழிலாளர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காஸ் ஏஜென்சிகளில் இந்தத் தொகை சரிவர வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந் நிலையில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம் மனுவில், அவிநாசி பகுதியில் இயங்கும் 2 காஸ் ஏஜென்சிகள், கடந்த 17ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு பணி வழங்காததால், அந்தக் காஸ் ஏஜென்சி குடோன் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
வரும் 25ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாவிட்டால், தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆட்சியரிடம் அணுகி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகள் போன்ற அரசின் ஆவணங்களை ஒப்படைக்கப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment