Tuesday, March 24, 2015
தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், அரசின் ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக, எரிவாயு உருளை விநியோகிப்புத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,500 வழங்க தொழிலாளர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காஸ் ஏஜென்சிகளில் இந்தத் தொகை சரிவர வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந் நிலையில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம் மனுவில், அவிநாசி பகுதியில் இயங்கும் 2 காஸ் ஏஜென்சிகள், கடந்த 17ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு பணி வழங்காததால், அந்தக் காஸ் ஏஜென்சி குடோன் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
வரும் 25ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாவிட்டால், தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆட்சியரிடம் அணுகி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகள் போன்ற அரசின் ஆவணங்களை ஒப்படைக்கப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment