Tuesday, March 24, 2015
தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், அரசின் ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக, எரிவாயு உருளை விநியோகிப்புத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,500 வழங்க தொழிலாளர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காஸ் ஏஜென்சிகளில் இந்தத் தொகை சரிவர வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந் நிலையில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம் மனுவில், அவிநாசி பகுதியில் இயங்கும் 2 காஸ் ஏஜென்சிகள், கடந்த 17ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு பணி வழங்காததால், அந்தக் காஸ் ஏஜென்சி குடோன் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
வரும் 25ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாவிட்டால், தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆட்சியரிடம் அணுகி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகள் போன்ற அரசின் ஆவணங்களை ஒப்படைக்கப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment