Tuesday, March 24, 2015
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஐஎன்டியூசி தேசிய செயலர் என்.நஞ்சப்பன் பேசியது: மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜக அதிகப்படியான அளவுக்கு பெருநிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி வசூலித்துள்ளது. அவற்றுக்கு கைமாறாக மத்திய பாஜக அரசு இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு ஒன்றரை ஆண்டுகளே ஆன, இந்தச் சட்டத்தால் கிடைத்துள்ள பலன்களை ஆராயாமல் அந்தச் சட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தி பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தரக் கூடாது. தமிழக அரசு கொடுத்துள்ள ஆதரவையும் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலர் கே.சிரஞ்சீவி பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டம் விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. இது தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சி நிர்வாகிகள் கோபி, சித்திக் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment