Tuesday, March 24, 2015
வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைப்பதற்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பல்லடம் வட்டம் வெங்கிட்டாபுரம் கிராம மக்கள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
பல்லடம் நகர மக்களுக்காக வெங்கிட்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் மின் மயானம் அமைப்பதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் சுமார் 1,500க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்தப் பகுதியில் மின்மயானம் அமைப்பதால், அப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இப் பகுதியிலுள்ள நீர்நிலைகளும் மாசுபடும் அபாயம் நிலவுகிறது.
பல்லடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இந்த மின்மயானம் அமைய இருப்பதால், பல்லடம் பகுதி மக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படக் கூடும். எனவே, வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு வேறு இடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment