Tuesday, March 24, 2015
திருப்பூரில் ஆதார் அட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடந்து வருவதாக பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாநகராட்சி, மண்டல அலுவலகங்களிலும் நடந்து வருகிறது. ஏற்கெனவே விண்ணப்பித்து புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்காமலும், புகைப்படம் எடுத்த நகலை கொண்டு சென்று காண்பித்தால் தள்ளுபடி ஆகிவிட்டதாகக் கூறி மீண்டும் விண்ணப்பிக்கவும் கூறுகின்றனர். மேலும், இரு முறைக்கு மேல் எடுத்தவர்களுக்கும் அதே பிரச்னை என்று கூறுகின்றனர். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால், தொழில்நுட்பப் பிரச்னை என்கின்றனர்.
இதனால் வயதானவர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, நன்கு ஆய்வு செய்து இனிமேல் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க புதிதாக கணினி மற்றும் ரேகை பதிவு செய்யும் உபகரணங்களையும் வழங்கி, அந்தந்த வார்டுகளுக்கு சென்று, பொதுமக்களுக்கு ஒரே முறையில் ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பல பகுதிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment