Tuesday, March 24, 2015
திருப்பூரில் ஆதார் அட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடந்து வருவதாக பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாநகராட்சி, மண்டல அலுவலகங்களிலும் நடந்து வருகிறது. ஏற்கெனவே விண்ணப்பித்து புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்காமலும், புகைப்படம் எடுத்த நகலை கொண்டு சென்று காண்பித்தால் தள்ளுபடி ஆகிவிட்டதாகக் கூறி மீண்டும் விண்ணப்பிக்கவும் கூறுகின்றனர். மேலும், இரு முறைக்கு மேல் எடுத்தவர்களுக்கும் அதே பிரச்னை என்று கூறுகின்றனர். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால், தொழில்நுட்பப் பிரச்னை என்கின்றனர்.
இதனால் வயதானவர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, நன்கு ஆய்வு செய்து இனிமேல் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க புதிதாக கணினி மற்றும் ரேகை பதிவு செய்யும் உபகரணங்களையும் வழங்கி, அந்தந்த வார்டுகளுக்கு சென்று, பொதுமக்களுக்கு ஒரே முறையில் ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பல பகுதிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...

0 comments:
Post a Comment