Tuesday, March 24, 2015
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளைக் கொட்டி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் புகை உருவாகி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர், இத் தீயை அணைத்து, குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால், நல்லாறு மாசுபடுவதுடன் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியது: தினசரி பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. தினசரி 14 முதல் 16 டன் வரை குப்பை சேருகிறது. இதை 80 தள்ளுவண்டிகள் மூலம் வாங்குவதற்காக 25 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து போடுவதற்காக 11 ஆயிரம் குப்பைக் கூடைகளும், சாக்குப் பைகளும் வழங்கப்படவுள்ளன.
இதைப் பயன்படுத்தி மக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதே போல பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை புதிய பேருந்து நிலையம் பின்புறம் கொட்டுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றாக அரசு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் குப்பைகளைச் சேகரித்து தரம் பிரித்து உரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment