Tuesday, March 24, 2015
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளைக் கொட்டி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் புகை உருவாகி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர், இத் தீயை அணைத்து, குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால், நல்லாறு மாசுபடுவதுடன் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியது: தினசரி பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. தினசரி 14 முதல் 16 டன் வரை குப்பை சேருகிறது. இதை 80 தள்ளுவண்டிகள் மூலம் வாங்குவதற்காக 25 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து போடுவதற்காக 11 ஆயிரம் குப்பைக் கூடைகளும், சாக்குப் பைகளும் வழங்கப்படவுள்ளன.
இதைப் பயன்படுத்தி மக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதே போல பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை புதிய பேருந்து நிலையம் பின்புறம் கொட்டுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றாக அரசு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் குப்பைகளைச் சேகரித்து தரம் பிரித்து உரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment