Tuesday, March 17, 2015
மதுரையில் லேசான மழை பெய்ததில் பல இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக மாறியுள்ளன.
சனிக்கிழமை இரவு திடீரென மழை பெய்ததில் மதுரையில் பல
இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கி நின்றது. தண்ணீர் வெளியேற வழி இல்லாத
சாலைகளில் வாகனங்கள் சென்றதால் மேலும் அரிக்கப்பட்டு பள்ளமாக மாறின.
மேலும் கொசுகள் உற்பத்தியாகும் இடமாகவும் அந்த இடங்கள் மாறியுள்ளன.
மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஜெய்ஹிந்துபுரம், பெரியார்
பேருந்துநிலையம், சிம்மக்கல் போன்ற பகுதிகளில் சாலைகள் பெரும்பாலும்
மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ள
மணிநகரம் பகுதியில் சாலைகள் போர்களம் போல் சிதிலமாகி காணப்படுகின்றன.
மதுரை பிரதான
சாலைகளில் தண்ணீர் தேங்கி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேறும்
சகதியுமான சாலைகளால் பள்ளிக் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்களும் அவதிப்பட்டனர். கொசுக்கள்
உற்பத்தியாவதால் உடனடியாக சாலைகளை செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள்
தெரிவித்தனர். மதுரையைப் பொறுத்தவரை மழைநீர் வடிந்து செல்வதற்கான பாதைகளை
சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
எதிர்பார்க்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment