Tuesday, March 24, 2015
மதுரை மாநகராட்சி 2015-16 ம் நிதி ஆண்டிற்கு 6.24 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் 2015-16 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை மேயர் ராஜன் செல்லப்பா தாக்கல் செய்தார் .அதில் 2015-16 ம் நிதி ஆண்டின் மொத்த வரவினம் 601.99 கோடியாகவும் மொத்த செலவினம் 608.23 கோடியாகவும் நிகர பற்றாக்குறை 6.24 கோடி என திட்டமிடப் பட்டுள்ளது .மூல தன வேலைக்காக 50.68 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அரசு மான்யம் மூலம் 91.15 கோடியும்,கடன்கள் மூலம் 47.74 கோடி மூலதன வேலைகள் செய்திட நிதி மதிப்பீடு வழிவகை செய்யப்பட்டுள்ளது .மூன்றாவது வைகை குடிநீர் திட்டத்திற்கு முதல் கட்டமாக 100 கோடி செலவிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அருள்தாஸ் புரம் திருமலைராயர் படித்துறை ஆகிய தரை மட்ட பாலங்களை உயர் மட்ட பாலங்களாக உயர்த்திட 30.40 கோடி வகை செய்யப்பட்டுள்ளது .காவிரி கூடு குடி நீர் திட்டம் மூலம் சோதனை ஓட்ட முறையில் 3.25 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் உட்கட்டமைப்பு வசதிக்காக 15.78 கோடி ,மாட்டு தாவணி கோச்சடை பகுதிகளில் லாரிகள் நிறுத்து மிடதிற்காக 11.02 கோடி ,விராட்டிபத்து அருகில் மீன் வளாகம் அமைத்திட 5.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது செல்லூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனை தொடங்கிடும் நிலையில் உள்ளது அனைத்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் சிஸ்டம் நடப்பு நிதி ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது .
முதல்வர் படம் இல்லாத பட்ஜெட் புத்தகம்
மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் படம் இடம் பெறவில்லை .மாறாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்று இருந்தது .துணை மேயர் திரவியம் படமும் இடம்பெறவில்லை
மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் படம் இடம் பெறவில்லை .மாறாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்று இருந்தது .துணை மேயர் திரவியம் படமும் இடம்பெறவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment