Tuesday, March 24, 2015
மதுரை மாநகராட்சி 2015-16 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் வழக்கம் போல அம்மா கோஷத்துடன் தொடங்கியது .கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர் .மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார் .கூட்டம் தொடங்கியவுடன் தவறான எண்ணத்தோடு கருப்பு சட்டை அணிந்து வந்து இருக்கும் திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற வேண்டும் என மேயர் கூறினர்ர் .உடனே திமுக கவுன்சிலர்கள் மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்ததை சுட்டி காட்டினர் .அதற்கு பதில் அளித்த மேயர் அவர் அய்யப்பனுக்கு கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார் நீங்கள் அது போல வந்துள்ளீர் களா என கேள்வி எழுப்பிட இடையில் குறுக்கிட்ட மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முக அழகிரி குறித்து அவதூறாக பேச திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற முற்பட்டனர் .அப்போது அதிமுக கவுன்சிலர்கள் எஸ் டி ஜெயபால் ,விஜயராகவன் ஆகியோர் திமுக கவுன்சிலர்களை நோக்கி தண்ணீர் பாட்டில்களை வீசினர் இதில் அதிமுக கவுன்சிலர் ஜெயலெட்சுமி காயமடைந்தார் .அவைக் காவலர் மீனாட்சி சுந்தரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது .எதிர்கட்சியினரை வெளியேற்றிட வேண்டும் என்பதற்காக அதிமுக குழு தலைவரும் ,மாமன்ற உறுப்பினரும் தண்ணீர் பாட்டில்களை வீசிய சம்பவம் அவை மரபையும் ஜனநாயகத்தையும் கேள்விக் குறி ஆக்கி உள்ளது
எம் எல் ஏ மயக்கம்
இதற்கிடையே அவைக்கு வந்திருந்த மத்திய தொகுதி எம் எல் ஏ சுந்தராஜன் திடீர் மயக்க மடைந்தார் .பின்னர் அவைக் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்
இதற்கிடையே அவைக்கு வந்திருந்த மத்திய தொகுதி எம் எல் ஏ சுந்தராஜன் திடீர் மயக்க மடைந்தார் .பின்னர் அவைக் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment