Wednesday, April 15, 2015
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிகளைத் தாண்டியதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.18 ஆயிரம் கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு 3 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என எதிர்பார்த்திருக்கிறோம். 38 வங்கிகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.21 ஆயிரம் கோடிகளாக உயரும் என்று திட்டமிட்டு இருந்தோம். இது தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பை இரட்டிப்பாக்க வேண்டுமெனில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனும், கனடாவுடனும் திறந்த நிலை வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, ரஷ்யா, பனாமா, அமெரிக்க நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளுக்கு எளிய முறையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் வகையில் சிறப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment