Wednesday, April 15, 2015
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிகளைத் தாண்டியதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.18 ஆயிரம் கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு 3 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என எதிர்பார்த்திருக்கிறோம். 38 வங்கிகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.21 ஆயிரம் கோடிகளாக உயரும் என்று திட்டமிட்டு இருந்தோம். இது தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பை இரட்டிப்பாக்க வேண்டுமெனில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனும், கனடாவுடனும் திறந்த நிலை வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, ரஷ்யா, பனாமா, அமெரிக்க நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளுக்கு எளிய முறையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் வகையில் சிறப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment