Wednesday, April 15, 2015
தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க வேண்டுமென கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சங்கத்தின் தாராபுரம் கோட்ட மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வட்டாரத் தலைவர் பரமசிவம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை முறையாக விநியோகிக்க வேண்டும். தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாததால், விபத்தில் படுகாயமடைவோர் திருப்பூர், கோவை போன்ற அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் நிலை நிலவுகிறது. எனவே, எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க வேண்டும்.
தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூனில் ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் நகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1.5 கோடி வருவாய் அதிகரிக்கும் என்றும், இதன்மூலம் நகரபகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், ஏலம் எடுத்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதைக் காரணம் காட்டி, கடந்த 11 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. எனவே, நகராட்சி நிர்வாகம் நிலுவையிலுள்ள வாடகை தொகையை விரைந்து வசூல் செய்யவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment