Friday, April 24, 2015
திருப்பூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர், பொல்லிக்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மன்ஞித்சிங் (63). இவர் தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை மதியம் பணி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காங்கயம் சாலை, விஜயாபுரம் பிரிவு அருகே சென்றபோது அவர் நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து கிழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மன்ஞித்சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மன்ஞித்சிங் உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (70). இவர், புதன்கிழமை மாலை பார்க் சாலையில் உள்ள பூங்காவிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர், மங்கலம் சாலை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் நடராஜின் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்து நடராஜ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (75). இவர், புதன்கிழமை இரவு பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர், செல்லாண்டியம்மன்துறை பகுதியைச் சேர்ந்தவர் தர்மர் (எ) குணசேகரன் (27). இவர், பல்லடம் சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். புதன்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் குணசேகரன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணசேகரனின் வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த குணசேகரன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
உடுமலை,: உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அந்த மின் நிலையத்துக்குட்பட்ட உடுமலை நகர், பழ...
-
காஷ்மீரில் அமைதி திரும்பஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment