Friday, April 17, 2015
தாராபுரத்தில் கடன் தவணையை முறையாகச் செலுத்தாதவரின் காரை பறிமுதல் செய்த நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 2 பேர் மீது காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாராபுரம், புதுமஜீத் தெருவைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (46). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான காரின் பேரில், தனது நண்பர் ராஜா என்பவர் உதவியுடன், பொள்ளாச்சி சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதாசிவத்திடம் ரூ. 1 லட்சம் கடனாக பெற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களாக கடன் தொகைக்கான மாதத் தவணையை ஹைதர் அலி முறையாகச் செலுத்தவில்லை. ஹைதர் அலி தனது காரை கருணாகரன் என்பருக்குச் சொந்தமான பழுது நீக்கும் பணிமனையில் நிறுத்தி இருந்தார்.
ஹைதர் அலி புதன்கிழமை பணிமனைக்குச் சென்று பார்த்தபோது அவரது காரை காணவில்லை. அதுகுறித்து கருணாகரனிடம் கேட்டபோது, ராஜாவின் உதவியுடன் நிதி நிறுவன அதிபர் சதாசிவம் காரை எடுத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தாராபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமஜெயத்திடம் ஹைதர் அலி புகார் மனு அளித்தார். நீதித் துறை நடுவர் உத்தரவின் பேரில், தாராபுரம் காவல் துறையினர் நிதி நிறுவன அதிபர் சதாசிவம், ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment