Friday, April 17, 2015
தாராபுரத்தில் கடன் தவணையை முறையாகச் செலுத்தாதவரின் காரை பறிமுதல் செய்த நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 2 பேர் மீது காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாராபுரம், புதுமஜீத் தெருவைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (46). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான காரின் பேரில், தனது நண்பர் ராஜா என்பவர் உதவியுடன், பொள்ளாச்சி சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதாசிவத்திடம் ரூ. 1 லட்சம் கடனாக பெற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களாக கடன் தொகைக்கான மாதத் தவணையை ஹைதர் அலி முறையாகச் செலுத்தவில்லை. ஹைதர் அலி தனது காரை கருணாகரன் என்பருக்குச் சொந்தமான பழுது நீக்கும் பணிமனையில் நிறுத்தி இருந்தார்.
ஹைதர் அலி புதன்கிழமை பணிமனைக்குச் சென்று பார்த்தபோது அவரது காரை காணவில்லை. அதுகுறித்து கருணாகரனிடம் கேட்டபோது, ராஜாவின் உதவியுடன் நிதி நிறுவன அதிபர் சதாசிவம் காரை எடுத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தாராபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமஜெயத்திடம் ஹைதர் அலி புகார் மனு அளித்தார். நீதித் துறை நடுவர் உத்தரவின் பேரில், தாராபுரம் காவல் துறையினர் நிதி நிறுவன அதிபர் சதாசிவம், ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment