Friday, April 17, 2015
தாராபுரத்தில் கடன் தவணையை முறையாகச் செலுத்தாதவரின் காரை பறிமுதல் செய்த நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 2 பேர் மீது காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாராபுரம், புதுமஜீத் தெருவைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (46). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான காரின் பேரில், தனது நண்பர் ராஜா என்பவர் உதவியுடன், பொள்ளாச்சி சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதாசிவத்திடம் ரூ. 1 லட்சம் கடனாக பெற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களாக கடன் தொகைக்கான மாதத் தவணையை ஹைதர் அலி முறையாகச் செலுத்தவில்லை. ஹைதர் அலி தனது காரை கருணாகரன் என்பருக்குச் சொந்தமான பழுது நீக்கும் பணிமனையில் நிறுத்தி இருந்தார்.
ஹைதர் அலி புதன்கிழமை பணிமனைக்குச் சென்று பார்த்தபோது அவரது காரை காணவில்லை. அதுகுறித்து கருணாகரனிடம் கேட்டபோது, ராஜாவின் உதவியுடன் நிதி நிறுவன அதிபர் சதாசிவம் காரை எடுத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தாராபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமஜெயத்திடம் ஹைதர் அலி புகார் மனு அளித்தார். நீதித் துறை நடுவர் உத்தரவின் பேரில், தாராபுரம் காவல் துறையினர் நிதி நிறுவன அதிபர் சதாசிவம், ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment