Friday, April 17, 2015
கோடை மழை தீவிரம் அடைந்ததையடுத்து அமராவதி அணை நீர்மட்டம் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாக பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே கோடை வெயில் தொடங்கிய நிலையில் அணையின் நீர் மட்டம் சரிந்தது. அணையில் 10 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. இதனால் கோடை காலக் குடிநீர்ப் பிரச்னையைச் சமாளிக்க முடியுமா என அமராவதி ஆற்றின் கரையோர கிராம மக்கள் கவலை அடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் குடிநீர்த் தேவையை ஓரளவு சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணை நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 33 அடி நீர் மட்டம் இருந்தது.
அணைக்கு 264 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் 491 மில்லியன் கன அடி நீர் இருப்பில் இருந்தது. அணையில் இருந்து 8 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணைப் பகுதியில் மழை அளவு 2 மி.மீ. பதிவாகியிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment