Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சிவசுப்பிரமணியன்(15) அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லாததை அடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் 10ம் வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார். நாளடைவில் அவர்களுக்குள்  நெருக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 31ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் வங்கி ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்டவைகளை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
இருவரும் எங்கு சென்றார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவன் சிவசுப்பிரமணியன் நேற்று சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் சிவசுப்பிரமணியனும் ஆசிரியை கோதைலட்சுமியும் சென்னை கும்மிடிபூண்டியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து அவர்களை தேடி  கடையநல்லூர் போலீசார் சென்னை வந்துள்ளனர்.

0 comments: