Thursday, April 30, 2015
பல்லடம் அருகே கொடுவாய் நாகலிங்கபுரத்தில் பசுமை உழவர் மன்றத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமை வகித்தார். பசுமை உழவர் மன்றப் பொருளாளர் என்.முத்துசாமி முன்னிலை வகித்தார். அதன் தலைவர் கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்றார்.
இதில், பசுமை உழவர் மன்றத்தை நபார்டு வங்கியின் திருப்பூர் மாவட்ட உதவிப் பொதுமேலாளர் வி.எஸ்.ஸ்ரீராம் துவக்கி வைத்தார்.
திருப்பூர் கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவர் ஆர்.செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி.கணேசன், மாவட்ட நிதி சார் கல்வி மையத்தின் நிதி சார் ஆலோசகர் பி.குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பொங்கலூர் மணிகண்டன் பேசியது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் உழவர் மன்றங்களை தொடங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். விவசாயிகள், வங்கிகள், அரசுக்குப் பாலமாக இருந்து செயல்படுவதே உழவர் மன்றத்தின் நோக்கமாகும்.
விவசாய விளைப் பொருள்களைத் தேவைக்கு ஏற்ப மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றவும், அவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் உழவர் மன்றங்களே, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உழவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1000 விவசாயிகளை ஒன்றிணைத்து, விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் அடுத்த மாதத்தில் செயல்படவுள்ளது.
இனி, விவசாயிகளே விற்பனையாளர்களாக மாறி விவசாயத் தொழிலதிபர்களாக மாறும் சூழ்நிலையை மத்திய அரசும், நபார்டு வங்கியும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில், உழவர் மன்றத் தலைவர்கள் கே.பி.சுப்பிரமணியம் (கோவில்பாளையம்), ஆர்.பாலசுப்பிரமணியம் (தங்காய்புதூர்), நாச்சிமுத்து (வஞ்சிபாளையம்), கோபாலகிருஷ்ணன் (கவுண்டன்பாளையம்) உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment