Thursday, April 30, 2015
பல்லடம் அருகே கொடுவாய் நாகலிங்கபுரத்தில் பசுமை உழவர் மன்றத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமை வகித்தார். பசுமை உழவர் மன்றப் பொருளாளர் என்.முத்துசாமி முன்னிலை வகித்தார். அதன் தலைவர் கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்றார்.
இதில், பசுமை உழவர் மன்றத்தை நபார்டு வங்கியின் திருப்பூர் மாவட்ட உதவிப் பொதுமேலாளர் வி.எஸ்.ஸ்ரீராம் துவக்கி வைத்தார்.
திருப்பூர் கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவர் ஆர்.செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி.கணேசன், மாவட்ட நிதி சார் கல்வி மையத்தின் நிதி சார் ஆலோசகர் பி.குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பொங்கலூர் மணிகண்டன் பேசியது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் உழவர் மன்றங்களை தொடங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். விவசாயிகள், வங்கிகள், அரசுக்குப் பாலமாக இருந்து செயல்படுவதே உழவர் மன்றத்தின் நோக்கமாகும்.
விவசாய விளைப் பொருள்களைத் தேவைக்கு ஏற்ப மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றவும், அவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் உழவர் மன்றங்களே, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உழவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1000 விவசாயிகளை ஒன்றிணைத்து, விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் அடுத்த மாதத்தில் செயல்படவுள்ளது.
இனி, விவசாயிகளே விற்பனையாளர்களாக மாறி விவசாயத் தொழிலதிபர்களாக மாறும் சூழ்நிலையை மத்திய அரசும், நபார்டு வங்கியும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில், உழவர் மன்றத் தலைவர்கள் கே.பி.சுப்பிரமணியம் (கோவில்பாளையம்), ஆர்.பாலசுப்பிரமணியம் (தங்காய்புதூர்), நாச்சிமுத்து (வஞ்சிபாளையம்), கோபாலகிருஷ்ணன் (கவுண்டன்பாளையம்) உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
0 comments:
Post a Comment