Thursday, April 30, 2015
பல்லடம் அருகே கொடுவாய் நாகலிங்கபுரத்தில் பசுமை உழவர் மன்றத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமை வகித்தார். பசுமை உழவர் மன்றப் பொருளாளர் என்.முத்துசாமி முன்னிலை வகித்தார். அதன் தலைவர் கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்றார்.
இதில், பசுமை உழவர் மன்றத்தை நபார்டு வங்கியின் திருப்பூர் மாவட்ட உதவிப் பொதுமேலாளர் வி.எஸ்.ஸ்ரீராம் துவக்கி வைத்தார்.
திருப்பூர் கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவர் ஆர்.செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி.கணேசன், மாவட்ட நிதி சார் கல்வி மையத்தின் நிதி சார் ஆலோசகர் பி.குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பொங்கலூர் மணிகண்டன் பேசியது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் உழவர் மன்றங்களை தொடங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். விவசாயிகள், வங்கிகள், அரசுக்குப் பாலமாக இருந்து செயல்படுவதே உழவர் மன்றத்தின் நோக்கமாகும்.
விவசாய விளைப் பொருள்களைத் தேவைக்கு ஏற்ப மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றவும், அவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் உழவர் மன்றங்களே, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உழவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1000 விவசாயிகளை ஒன்றிணைத்து, விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் அடுத்த மாதத்தில் செயல்படவுள்ளது.
இனி, விவசாயிகளே விற்பனையாளர்களாக மாறி விவசாயத் தொழிலதிபர்களாக மாறும் சூழ்நிலையை மத்திய அரசும், நபார்டு வங்கியும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில், உழவர் மன்றத் தலைவர்கள் கே.பி.சுப்பிரமணியம் (கோவில்பாளையம்), ஆர்.பாலசுப்பிரமணியம் (தங்காய்புதூர்), நாச்சிமுத்து (வஞ்சிபாளையம்), கோபாலகிருஷ்ணன் (கவுண்டன்பாளையம்) உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
0 comments:
Post a Comment