Thursday, April 30, 2015
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தாராபுரத்தில் இச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ.காளிமுத்து தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவர்கள் பி.வி.சாமிக்கண்ணு, ஓ.என்.கதிர்வேல், எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தில்லியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜந்திர சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய, மாநில வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
தாராபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நஞ்சை நிலங்களை தனி நபர்கள் விலைக்கு வாங்கி 100 அடிக்கும் கீழாக கிணறு வெட்டியும், ஆயிரம் அடிக்குக் கீழாக ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் எடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும்.
உப்பாறு அணையின் பாசனப் பகுதியை பி.ஏ.பி. பாசனத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment