Thursday, April 30, 2015
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தாராபுரத்தில் இச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ.காளிமுத்து தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவர்கள் பி.வி.சாமிக்கண்ணு, ஓ.என்.கதிர்வேல், எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தில்லியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜந்திர சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய, மாநில வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
தாராபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நஞ்சை நிலங்களை தனி நபர்கள் விலைக்கு வாங்கி 100 அடிக்கும் கீழாக கிணறு வெட்டியும், ஆயிரம் அடிக்குக் கீழாக ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் எடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும்.
உப்பாறு அணையின் பாசனப் பகுதியை பி.ஏ.பி. பாசனத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
0 comments:
Post a Comment