Thursday, April 30, 2015
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
உழைப்பாளிகளின் தினமான மே தினத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய தலைவர் பெரியார். மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. மே தினத்தை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்து
சிறப்புச் சேர்த்தார் திமுக தலைவர் கருணாநிதி.
மே தினத்தை திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மாநகரம், நகர, ஒன்றியப்பகுதி, பேரூராட்சி மற்றும் வட்டக் கிளைகள் முழுவதும் கட்சிக் கொடி, தொழிற்சங்க கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மே தினத்தை முன்னிட்டு மே முதல் தேதி காலை 8 மணிக்கு மங்கலம் நான்கு சாலை சந்திப்பில் ஆட்டோ சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா, 9 மணியளவில் பனியன் சங்கம் சார்பில் பூண்டி சுற்றுச் சாலை டெக்ஸ் போர்ட் அருகில் கொடியேற்று விழா, 10 மணியளவில் அமைப்பு சாரா நல வாரியம் சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் குழந்தைகளுக்குப் புத்தகம் வழங்குதல், மாலை 6 மணியளவில் திருப்பூர் 44-ஆவது வட்டம் வெங்கடேஸ்வரா நகரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...

0 comments:
Post a Comment