Thursday, April 30, 2015
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
உழைப்பாளிகளின் தினமான மே தினத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய தலைவர் பெரியார். மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. மே தினத்தை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்து
சிறப்புச் சேர்த்தார் திமுக தலைவர் கருணாநிதி.
மே தினத்தை திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மாநகரம், நகர, ஒன்றியப்பகுதி, பேரூராட்சி மற்றும் வட்டக் கிளைகள் முழுவதும் கட்சிக் கொடி, தொழிற்சங்க கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மே தினத்தை முன்னிட்டு மே முதல் தேதி காலை 8 மணிக்கு மங்கலம் நான்கு சாலை சந்திப்பில் ஆட்டோ சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா, 9 மணியளவில் பனியன் சங்கம் சார்பில் பூண்டி சுற்றுச் சாலை டெக்ஸ் போர்ட் அருகில் கொடியேற்று விழா, 10 மணியளவில் அமைப்பு சாரா நல வாரியம் சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் குழந்தைகளுக்குப் புத்தகம் வழங்குதல், மாலை 6 மணியளவில் திருப்பூர் 44-ஆவது வட்டம் வெங்கடேஸ்வரா நகரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...

0 comments:
Post a Comment