Wednesday, April 15, 2015

மொழி மாற்றத் தொடர்களை நிறுத்தக் கோரி, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க, சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
மொழி மாற்றத் தொடர்களை நிறுத்தக் கோரி இன்று (ஏப்ரல் 15) ஒரு நாள் சின்னத்திரை தொடர்பான பணிகளும் நிறுத்தப்பட்டன.
தென்னந்திய சின்னத்திரை தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகியவை இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் இன்று காலை சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பலரும் மொழி மாற்றத் தொடர்களால், சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று விவரித்தார்கள்.
இக்கூட்டத்தின் முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் வருமாறு,
* மொழி மாற்றத் தொடர்களால் சின்னத்திரையில் பணிபுரியும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்கள் என்று 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் மொழி மாற்றத் தொடர்களை உடண்டியாக தவிர்க்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களை கேட்டுக் கொள்வது.
* மொழி மாற்றத் தொடர்களுக்கு பதிலாக நேரடி தொடர்களுக்கு வாய்ப்பளித்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழ்விக்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுப்பது.
* இது தொடர்பாக, ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளிப்பது.
* மேலும், இன்றே அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களை வழங்குவது.
இக்கூட்டத்தில் ராதிகா சரத்குமார், நளினி, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், பெப்சி சிவா, இயக்குநர் கெளதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment