Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2013-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், வி.எஸ்.ரவி, ஜி.சொக்கலிங்கம், வி.எம்.வேலுமணி ஆகிய 8 பேர் நிரந்தர நீதிபதிகளாகியுள்ளனர்.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவர்கள் 8 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

0 comments: