Wednesday, April 15, 2015

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அப்பு லூனா (வயது 28) இவர் பக்ரைனில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவர் தன்னை தனது முதலாளி மகன் கற்பழித்து விட்டதாகவும். தினமும் அடித்து உதைப்பதாகவும் சமூக வலைதளமான பேஸ் புக்கில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை 19 ஆயிரம் பேர் லைக் செய்து இருந்தனர். 78 ஆயிரம் ஷேர் செய்யபட்டு இருந்தது. இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பில்லைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது இதை தொடர்ந்து தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கபட்டார்.
3 நிமிடம் ஓடக்கூடிய இந்தவீடியோவில் லூனா கூறி இருப்பதாவது:-
தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை கற்பழித்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நான் வெளிவர உதவி செய்யுங்கள், இப்போது வரை, நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். என் பிறப்புறுப்பு காயமடைந்து உள்ளது. நான் தடுத்ததற்காக எனது காலில் அடித்து உள்ளார். அதனால் காலில் காயமாக உள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார் என கூறி உள்ளார்.
அவரது முதலாளி அவரது மகன் கற்பழித்ததையும் அடித்து உதைப்பதையும் நம்ப வில்லை. ஓப்பந்தம் மீதம் முள்ள 2 மாதங்களையும் முடித்து விட்டு நீ உன் வீட்டுக்கு போ என கூறியதாக கூறியுள்ளார். நீ கர்ப்பமாக இருந்தால் கருகலைப்பு செய்து விடு என முதலாளி கூறியதாக கூறி உள்ளார்.
லூனா இது குறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு ஒரு புகார் அளித்து உள்ளார்.
மீட்கபட்ட பிறகு அப்பு லூனா வெளியிட்டு இருந்த வீடியோவில் தான் தூதரக பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பில்ப்பைன்ஸ் தூதரக அதிகாரி கூறும் போது லூனாவை வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அவர் வேலை செய்யும் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாக கூறினார். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளார்.
லூனா தாக்கபட்ட குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்து உள்ளதாக பிலிப்பைன்ஸ் தூதர துணை அதிகாரி ரிக்கி ஆரகன் தெரிவித்து உள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக அந்நாட்டை சேர்ந்த 1 கோடி பேர் உலகம் முழுவதும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இது நாட்டின் 10 கோடி பேரில் 10 சதவீதமாகும். அவர்கள் அங்கு கேவலாமான மற்றும் ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment