Wednesday, April 15, 2015

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு, கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவிடம், அந்த நாட்டில் வாழும் "நீதிக்கான சீக்கியர்கள்' (எஸ்எஃப்ஜே) என்ற அமைப்பு புகார் கொடுத்துள்ளது.
பிரதமர் மோடி, அடுத்த வாரம் கனடா செல்லவுள்ள நிலையில் இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நரேந்திர மோடி கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை பரவுவதற்கு உதவி புரிந்தார்.
எனவே மோடி மீது மனித உரிமை மீறல் குற்ற வழக்கு தொடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு கடந்த ஆண்டு மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்த நாட்டு நீதிமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தது.
ஒரு நாட்டின் தலைமைப் பதவியில் ஒருவர் இருக்கும்போது, அவர் மீது, அமெரிக்கச் சட்டத்தின்படி மனித உரிமை மீறல் வழக்குத் தொடுக்க இயலாது.
மேலும், இந்தியப் பிரதமர் மீது மனித உரிமை வழக்கு தொடுக்க இயலாதவாறு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு அந்த நாட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியது.
அதனையடுத்து, அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், மனித உரிமை மீறல் குற்ற வழக்கில், ஒரு தேசத்தின் தலைவருக்கு அமெரிக்க, இந்திய சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, கனடா நாட்டு சட்டத்தில் வழங்கப்படவில்லை என்று காரணம் கூறி, மோடி மீது வழக்கு தொடுக்கவேண்டும் என்று நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (எஸ்எஃப்ஜே), கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவிடம் புகார் கொடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment