Friday, April 17, 2015
மதுரையை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கோவர்த்தனன். இவரது மனைவி ஜோதி.
இவர் செயற்கை முறை மருத்துவத்தில் கர்ப்பம் அடைந்தார். 6½ மாத கர்ப்பமாக
இருந்தபோது டிசம்பர் மாதம் மதுரை வடமலையான் மருத்துவமனையில் ஜோதி
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மிக மிக குறைந்த எடையில் 3
குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து வடமலையான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி, பச்சிளம் குழந்தைகள் நல டாக்டர்கள் ஜலஜா அசோக், வினோத் ஆகியோர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:–
இந்தியாவிலேயே மிக மிக எடை குறைவாக 3 குழந்தைகள் மதுரை வடமலையான் மருத்துவமனையில் கோவர்த்தனன்–ஜோதி தம்பதியருக்கு பிறந்தது. குழந்தைகளின் தாய் ஜோதி 6½ மாதம் கர்ப்பமாக இருந்தபோது எங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். சேர்ந்த 7 நாட்களில் அவருக்கு சிசேரியன் மூலம் 2 பெண் மற்றும் ஒரு ஆண் என 3 குழந்தைகள் பிறந்தன.
பொதுவாக ஒரு குழந்தை பிறப்பதற்கு 10 மாதங்கள் ஆகும். ஆனால் இங்கு 12 வாரங்களுக்கு முன்னதாகவே குழந்தைகள் பிறந்தன. இயல்பாக பிறந்த குழந்தையின் எடை ஏறத்தாழ 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால் ஜோதிக்கு பிறந்த 3 குழந்தைகளும் 1.5 கிலோ, 500 கிராம், 540 கிராம் எடையுடன் இருந்தது.
ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 3 குழந்தைகளும் மிக மிக எடை குறைந்ததாக இருந்ததால் மதுரை வடமலையான் மருத்துவமனையின் அதிநவீன சிசு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டன. இந்த சாதனை இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்தது கிடையாது.
இதற்கு முன்பு 2004–ம் ஆண்டில் உலகிலேயே மிக குறைவாக 240 கிராமில் பிறந்த குழந்தை சிகாகோவில் காப்பாற்றப்பட்டது. அதன் பிறகு 2012–ம் ஆண்டில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 450 கிராம் எடை கொண்ட குழந்தை காப்பாற்றப்பட்டது. தற்போது வடமலையான் மருத்துவமனையில் குறைந்த எடை கொண்ட 3 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளது.
தற்போது இந்த குழந்தைகள் 3.168 கிலோ 1.320 கிலோ, 1.476 கிலோ எடையுடன் நலமாக உள்ளனர். இந்த குழந்தைகள் பிறக்கும் போது ஒரு கையளவு மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தைகள் பிறப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் மதுரை வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களின் தீவிர அர்ப்பணிப்பு சேவை முக்கியமானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து வடமலையான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், வடமலையான் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவு சார்பில் ‘‘டாரிகா குழந்தைகள் நலத் திட்டம்’’ செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 மாதம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறலாம். இந்த திட்டத்தில் மருத்துவ ஆலோசனை பெற ரூ.250 மட்டுமே பெறப்படுகிறது. தற்போது மதுரை வடமலையான் மருத்துவமனையில் பிறந்த எடை குறைந்த 3 குழந்தைகளுக்கும் டாரிகா திட்டத்தில் ஒரு வருட காலம் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment