Wednesday, April 15, 2015

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசூப்சாயி போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 270க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தி ஒராண்டாகிவிட்டது.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசூப்சாயி போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், "உங்களை மீட்பதில் நைஜீரிய தலைவர்களும், சர்வதேச சமூகமும் போதிய உதவி செய்யவில்லை. உங்களை மீட்பதற்கு அவர்கள் நிறைய மெனக்கிட்டிருக்க வேண்டும்.
நீங்கள் பத்திரமாக விடுதலையாக வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கும் பலரில் நானும் ஒருவர்.
நீங்கள் இதுநாள் வரை தீவிரவாதிகள் பிடியில் சிக்கிக் கொண்டு படும் வேதனைகளை யூகித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால், நாங்கள் உங்களை மறந்துவிடவில்லை. இதை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரையும் ஆரத் தழுவி, உங்களுடன் சேர்ந்து இறைவனைத் தொழுது, உங்கள் குடும்பத்தினர் உங்கள் விடுதலையை கொண்டாடும் போது நானும் அதில் பங்கேற்க வேண்டும். அந்த நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது சகோதரிகள். அதுவும் துணிச்சலான சகோதரிகள்" என குறிப்பிட்டுள்ளார்.
போகோ ஹராம் தீவிரவாதிகளால் நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்ட ஓராண்டு கடந்ததை நினைவுகூரும் வகையில் ('Bring Back Our Girls') பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ் என்ற பிரச்சாரக் குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment