Friday, April 17, 2015
உடுமலை நகரின் முக்கிய வடிகாலாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடையில் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
உடுமலை நகரின் முக்கிய வடிகால்களாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடை, தங்கம்மாள் ஓடை ஆகியவற்றைத் தூர் வார வேண்டும், இரு ஓடைகளின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில், உடுமலை நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், கடந்த சில வாரங்களாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையான கழுத்தறுத்தான் ஓடையை தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பழனி சாலையில் தொடங்கி ஐஸ்வர்யா நகர் முதல் ஏரிப்பாளையம் வரையில் உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஓடையின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில் தங்கம்மாள் ஓடையையும் உடனடியாகத் தூர் வாரவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்கள், துணிக் கடைகள், வியாபார நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியிருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் வியாழக்கிழமை தொடங்கியது. இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் க.சரவணகுமார், நகரமைப்பு அலுவலர் பாஸ்கர், கட்டட ஆய்வாளர்கள் பழனிகுமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment