Friday, April 17, 2015
உடுமலை நகரின் முக்கிய வடிகாலாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடையில் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
உடுமலை நகரின் முக்கிய வடிகால்களாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடை, தங்கம்மாள் ஓடை ஆகியவற்றைத் தூர் வார வேண்டும், இரு ஓடைகளின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில், உடுமலை நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், கடந்த சில வாரங்களாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையான கழுத்தறுத்தான் ஓடையை தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பழனி சாலையில் தொடங்கி ஐஸ்வர்யா நகர் முதல் ஏரிப்பாளையம் வரையில் உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஓடையின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில் தங்கம்மாள் ஓடையையும் உடனடியாகத் தூர் வாரவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்கள், துணிக் கடைகள், வியாபார நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியிருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் வியாழக்கிழமை தொடங்கியது. இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் க.சரவணகுமார், நகரமைப்பு அலுவலர் பாஸ்கர், கட்டட ஆய்வாளர்கள் பழனிகுமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment