Friday, April 17, 2015
உடுமலை நகரின் முக்கிய வடிகாலாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடையில் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
உடுமலை நகரின் முக்கிய வடிகால்களாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடை, தங்கம்மாள் ஓடை ஆகியவற்றைத் தூர் வார வேண்டும், இரு ஓடைகளின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில், உடுமலை நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், கடந்த சில வாரங்களாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையான கழுத்தறுத்தான் ஓடையை தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பழனி சாலையில் தொடங்கி ஐஸ்வர்யா நகர் முதல் ஏரிப்பாளையம் வரையில் உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஓடையின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில் தங்கம்மாள் ஓடையையும் உடனடியாகத் தூர் வாரவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்கள், துணிக் கடைகள், வியாபார நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியிருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் வியாழக்கிழமை தொடங்கியது. இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் க.சரவணகுமார், நகரமைப்பு அலுவலர் பாஸ்கர், கட்டட ஆய்வாளர்கள் பழனிகுமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment