Friday, April 17, 2015
உடுமலை நகரின் முக்கிய வடிகாலாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடையில் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
உடுமலை நகரின் முக்கிய வடிகால்களாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடை, தங்கம்மாள் ஓடை ஆகியவற்றைத் தூர் வார வேண்டும், இரு ஓடைகளின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில், உடுமலை நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், கடந்த சில வாரங்களாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையான கழுத்தறுத்தான் ஓடையை தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பழனி சாலையில் தொடங்கி ஐஸ்வர்யா நகர் முதல் ஏரிப்பாளையம் வரையில் உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஓடையின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில் தங்கம்மாள் ஓடையையும் உடனடியாகத் தூர் வாரவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்கள், துணிக் கடைகள், வியாபார நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியிருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் வியாழக்கிழமை தொடங்கியது. இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் க.சரவணகுமார், நகரமைப்பு அலுவலர் பாஸ்கர், கட்டட ஆய்வாளர்கள் பழனிகுமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment