Wednesday, April 15, 2015

செம்மரம் வெட்டும் கூலியாட்களை அழைத்துச் செல்வதில் ஆந்திர மாநில அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி- வள்ளிமலை சந்திப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த மினி லோடு வேனில் செம்மரம் கடத்தியதாக ஓட்டுநர் கிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய 2 பேர் குறித்து காட்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தப்பி ஓடியவர்களில் ஒருவரான காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து புரோக்கர் மகேஷ்குமார் (30) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இவர் கொடுத்த தகவல் குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறிய தாவது:
திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டி பதுக்கி வைத் துள்ள இடத்தில் இருந்து வேலூர் வரை செம்மர கடத்தல் வாகனங் களுக்கு வழிகாட்டும் பணியில் மகேஷ்குமார் கடந்த 1 மாதமாக ஈடுபட்டுள்ளார். ஒரு முறை திருப்பதி சென்று வந்தால் ரூ.3 ஆயிரம் வரை அவருக்கு கூலி கிடைக்கும். செம்மரம் கடத்தல் கும்பலின் தொடர்பில் உள்ளார்.
செம்மரம் வெட்டும் கூலியாட் களை ஏற்றிச் சென்றதாகக் கூறி தமிழக அரசுப் பேருந்துகள் பலவற்றை ஆந்திர வனத் துறையினர் தொடர்ந்து பறிமுதல் செய்துவருகின்றனர். பறிமுதல் செய்த பேருந்துகளை தமிழக அரசு அதிகாரிகள் கடுமையான முயற்சி செய்து மீட்டு வந்துள்ளனர். இதனால், தமிழக அரசுப் பேருந்து களில் செம்மரம் வெட்டச் செல்லும் கூலியாட்கள் யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனால், மகேஷ்குமார் உதவி யுடன் ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளில் செம்மரம் வெட்டும் கூலியாட்கள் 20 முதல் 30 பேர் வரை கடத்தல் கும்பல் அனுப்பி வைத்துள்ளது. முன்ன தாகவே, செம்மரக் கடத்தல் புரோக்கர்கள் மகேஷ்குமாரைத் தொடர்புகொண்டு தகவல் தெரி விப்பார்கள். அவர் தனது தொடர் பில் உள்ள குறிப்பிட்ட சில ஆந்திர அரசுப் பேருந்துகளில் கூலியாட்களை ஏற்றி அனுப்புவார். அந்தப் பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு கணிசமான தொகை வழங்கப்படும்.
திருப்பதி அருகே சென்றதும் வனத்துறையையொட்டிய இடத்தில் 2 நிமிடம் மட்டும் நிற்கும் பேருந்தில் இருந்து கூலி ஆட்கள் இறங்கி வனப் பகுதிக்குள் மறைந்துவிடுவார்கள். ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளை அந்த மாநில வனத்துறை அதிகாரிகள் முறையாக சோதனையிட மாட்டார்கள் என்பதால் இந்த நூதன முறையை கடத்தல் கும்பல் கையாண்டுள்ளார்கள்’’ என்றனர்.
ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளை அந்த மாநில வனத்துறை அதிகாரிகள் முறையாக சோதனையிட மாட்டார்கள் என்பதால் இந்த நூதன முறையை கடத்தல் கும்பல் கையாண்டுள்ளார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment