Saturday, May 02, 2015
பாலக்காட்டு மாதவன் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விவேக், அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், சினிமா நாயகிகள் குறித்த தனது கவலையை வெளியிட்டார். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்தான் கணவனாக வேண்டும் என்று சொல்லும் நடிகைகள், காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகிறார்கள், தட்டிக் கழிக்கிறார்கள் என்றார்.

இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முதலில் வைத்தவர் தங்கர்பச்சான். அவர் காமெடி நடிகர் இல்லை என்றாலும் அவரது சீரியஸ் பேச்சுகளில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் யாரும் முன்வரவில்லை என்று, உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகப்போறதில்லை, ஆண் பிள்ளை பிறக்கப் போறதில்லை என்றெல்லாம் வசைபாடினார்.
கருணாஸ் அந்தளவுக்குப் போகவில்லை. என்றாலும் அவருக்கும் கதாநாயகிகள்தான் பிரச்சனை. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஹீரோயின் கிடைப்பதில்லை. கருப்பா இருக்கிறதால எந்த நடிகையும் நடிக்க வரமாட்டேங்குறாங்க என்று நிற அரசியலை அவர் முன்வைத்தார். இப்போது விவேக்.
இவர்கள் அனைவருமே நடிகைகளைத்தான் குற்றம்சாட்டுகிறார்கள். இது நியாயமா என்பதுதான் நமது கேள்வி.
நடிக்க வருகிற நடிகைகள், அதிலும் அழகை முதலீடாக்கி கதாநாயகிகளாக வலம்வரும் யாரும் இங்கு கலைச்சேவை புரிய வரவில்லை. அழகு இருக்கிற காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து - அப்படி நடித்தால்தான் முன்னணி நாயகி ஆக முடியும் - நாலு காசு சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாமே. கொசுறாக புகழும் கிடைத்தால் ஓகே.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment