Saturday, May 02, 2015
பாலக்காட்டு மாதவன் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விவேக், அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், சினிமா நாயகிகள் குறித்த தனது கவலையை வெளியிட்டார். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்தான் கணவனாக வேண்டும் என்று சொல்லும் நடிகைகள், காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகிறார்கள், தட்டிக் கழிக்கிறார்கள் என்றார்.

இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முதலில் வைத்தவர் தங்கர்பச்சான். அவர் காமெடி நடிகர் இல்லை என்றாலும் அவரது சீரியஸ் பேச்சுகளில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் யாரும் முன்வரவில்லை என்று, உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகப்போறதில்லை, ஆண் பிள்ளை பிறக்கப் போறதில்லை என்றெல்லாம் வசைபாடினார்.
கருணாஸ் அந்தளவுக்குப் போகவில்லை. என்றாலும் அவருக்கும் கதாநாயகிகள்தான் பிரச்சனை. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஹீரோயின் கிடைப்பதில்லை. கருப்பா இருக்கிறதால எந்த நடிகையும் நடிக்க வரமாட்டேங்குறாங்க என்று நிற அரசியலை அவர் முன்வைத்தார். இப்போது விவேக்.
இவர்கள் அனைவருமே நடிகைகளைத்தான் குற்றம்சாட்டுகிறார்கள். இது நியாயமா என்பதுதான் நமது கேள்வி.
நடிக்க வருகிற நடிகைகள், அதிலும் அழகை முதலீடாக்கி கதாநாயகிகளாக வலம்வரும் யாரும் இங்கு கலைச்சேவை புரிய வரவில்லை. அழகு இருக்கிற காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து - அப்படி நடித்தால்தான் முன்னணி நாயகி ஆக முடியும் - நாலு காசு சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாமே. கொசுறாக புகழும் கிடைத்தால் ஓகே.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment