Saturday, May 02, 2015
தொடங்கிய சில வருடங்களிலேயே மிகப்பெரிய சரிவையும், விமர்சனத்தையும் சந்தித்துள்ளது, விஜய் அவார்ட்ஸ். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அளிக்கும் இந்த திரைப்பட விருது கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குள்ளாகி வந்தது.
விஜய் தொலைக்காட்சி எந்தெந்தப் படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்குகிறதோ அந்தப் படங்களுக்கு மட்டுமே பிரதான விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், எந்த முன்னணி நடிகர் விழாவுக்கு வர சம்மதிக்கிறாரோ அவருக்கு ஒரு விருது நிச்சயம் உண்டு.

திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, சாதாரண பார்வையாளர்களே இதுவொரு சந்தர்ப்பவாத விருது என்று பேசத் தொடங்கினர். இந்த வருட விஜய் அவார்ட்ஸ் போலித்தனத்தின் உச்சத்தை தொட்டது.
முதலாவதாக விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் தொகுப்பாளினி என கூறப்படும் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பின்பக்கம் சூடு வைத்த குரலில் அவர் கத்தி கூச்சல் போடுகையில் ஆவியின் எழுப்புதல் கூட்டத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றும். அப்படியொரு குரல்வளம் அவருக்கு. தனது மைக் முழுங்கிய குரலில் அவர் கூப்பாடு போடும்போது பாதி வார்த்தைகள் புரிவதும் இல்லை.
இந்தமுறையும் டிடியின் திருவாய் இதேபோல்தான் மலர்ந்தது. கடுப்பான கே.எஸ்.ரவிக்குமாரும் மைக்கில் டிடி போலவே கத்திப் பேசி, "மைக்கில் பேசினாலே நன்றாக கேட்கும். அப்படியிருந்தும் கத்தி பேசுவது டிடி ஒருத்தர்தான்" என மேடையிலேயே கடுப்படித்தார்.
சென்ற வருடம் சிவ கார்த்திகேயன் அழுததை திரும்பத் திரும்ப விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேடியது. அத்தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் என்பதால் சிவ கார்த்திகேயன் மீது அளவுகடந்த உரிமை எடுத்திருப்பார்கள் போல. "இந்த விழா விடியற்காலை 2 மணிவரை நடக்கும் குடிக்க தண்ணிகூட தரமாட்டாங்க. அடுத்தமுறை புளிசாதம் கட்டிட்டு வாங்க" என்று, விஜய் தொலைக்காட்சியையும்/ விஜய் அவார்ட்ஸையும் மேடையில் விமர்சித்தார்.
இந்த வருட விழாவின் இன்னொரு அவலம், இளையராஜாவை விழாவுக்கு அழைத்து விருது தராமலே அனுப்பியது. செவாலியே சிவாஜி விருது இந்த வருடம் இளையராஜாவுக்கு தருவதாகக் கூறி விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்தார். ஆனால், விருது வழங்கவில்லை. சிவாஜி குடும்பத்தினர் வந்த பிறகு விருது தருகிறோம் என்று அவரை உட்கார வைத்தார்கள். அப்போதும் யாரும் வரவில்லை. அதற்கு மேலும் காத்திருந்து விருது வாங்க அவர் என்ன அறிமுக இசையமைப்பாளரா? இல்லை விஜய் தொலைக்காட்சியின் வேலைக்காரரா?. பாதியிலேயே இளையராஜா விழாவிலிருந்து வாக் அவுட் செய்தார். இதேபோல் பல பேர்.
சிவாஜி குடும்பத்துக்கும் முறையான அழைப்பு இல்லை போலிருக்கிறது. கடைசிவரை அவர்களில் யாரும் விழாவில் தலைகாட்டவில்லை.
இந்தமுறையும் அவர்கள் ஒளிபரப்பு உரிமை வாங்கிய படங்களே அதிக விருதுகளை பெற்றன. அவர்களே தந்து அவர்களே வாங்கிக் கொள்ளும் விழா என்பது உறுதியான பிறகு மற்றவர்களுக்கு அங்கு என்ன வேலை?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment