Saturday, May 09, 2015
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை பொங்குபாளையம் பாறைக் குழியில் கொட்டவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் முகக் கவசம் அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காளம்பாளையம் பகுதியில் பாறைக் குழி உள்ளது. இதில், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பை தினமும் லாரிகள் மூலமாக கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரக் கேடு ஏற்பட்டுவதாகவும் புகார் கூறி, இந்தப் பாறைக் குழியில் குப்பையைக் கொட்டக் கூடாது என அக்கிராம மக்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பாறைக் குழியில் பாதுகாப்பான முறையில் குப்பை கொட்டப்படும். குப்பைக்கு மேல் மண் கொட்டப்பட்டு, துர்நாற்றத்தைத் தடுக்கும் வகையில் உரிய மருந்துகள் தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இப்பகுதியில் குப்பையை கொட்டி வருவதாக அக்கிராம மக்கள் புகார் கூறி, இனி குப்பை கொட்டக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 4-ஆம் தேதி குப்பை லாரிகளை சிறைப்பிடித்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பாறைக் குழிக்குள் ஏற்கெனவே கொட்டப்பட்ட குப்பை மீது லாரிகள் மூலமாக மண் கொட்டப்பட்டது.
அதையடுத்து, லாரிகள் மூலமாக மீண்டும் குப்பை கொட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் முகக் கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து குப்பை லாரிகளையும் திரும்ப அனுப்பி வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சமரசம் பேசினர்.
இது தொடர்பாக சனிக்கிழமை கோட்டாட்சியர் இங்கு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இதற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். அதையடுத்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment