Saturday, May 09, 2015
திருப்பூரில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களிடம் பணியாற்றி வந்த லாரி ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த திமுக வார்டு செயலாளர் சிவசுப்பிரமணியம்(55). இவரது மனைவி சாரதாம்பாள் (45), மகள் ஷோபனா (24), மகன் நவீந்திரன் (22). இவர் திமுக இளைஞரணி அமைப்பாளர். சிவசுப்பிரமணியத்திடம் லாரி ஓட்டுநராக ஸ்டாலின் என்பவர் வேலை செய்து வந்தார்.
 இந்நிலையில், மே 5-ஆம் தேதி சிவசுப்பிரமணியத்தையும், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரையும் இரும்புக் கம்பியால் ஸ்டாலின் தாக்கினாராம். இதில்,  ஷோபனா பலத்த காயமடைந்தார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இக்கொடூர கொலைச் சம்பவத்தின் போது 8 மாத கர்ப்பிணியான ஷோபனா, கதவை தாழிட்டுக் கொண்டு, உயிர் தப்பியுள்ளார்.
 இது குறித்து 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஸ்டாலினை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்நிலையில், தனிப்படை போலீஸார் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்டாலினை  பிடித்தனர்.
 அவர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் செமமங்குடி புளிச்சக்காடி பகுதியைச் சேர்ந்த கருப்பையாவின் மகன் என தெரியவந்தது.
 விசாரணையில், சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்தார், வெகுநாள்களாக வேலைக்கு வராமல் இருந்த ஸ்டாலினை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவர் இரும்புக் கம்பியால் அவர்களை அடித்துக் கொன்று, சாரதாம்பாள் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்றதாகவும் தெரியவந்தது. போலீஸார், ஸ்டாலினை கைது செய்து, தாலிக்கொடியை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
.jpg)
0 comments:
Post a Comment