Saturday, May 09, 2015
திருப்பூரில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களிடம் பணியாற்றி வந்த லாரி ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த திமுக வார்டு செயலாளர் சிவசுப்பிரமணியம்(55). இவரது மனைவி சாரதாம்பாள் (45), மகள் ஷோபனா (24), மகன் நவீந்திரன் (22). இவர் திமுக இளைஞரணி அமைப்பாளர். சிவசுப்பிரமணியத்திடம் லாரி ஓட்டுநராக ஸ்டாலின் என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், மே 5-ஆம் தேதி சிவசுப்பிரமணியத்தையும், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரையும் இரும்புக் கம்பியால் ஸ்டாலின் தாக்கினாராம். இதில், ஷோபனா பலத்த காயமடைந்தார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இக்கொடூர கொலைச் சம்பவத்தின் போது 8 மாத கர்ப்பிணியான ஷோபனா, கதவை தாழிட்டுக் கொண்டு, உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஸ்டாலினை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தனிப்படை போலீஸார் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்டாலினை பிடித்தனர்.
அவர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் செமமங்குடி புளிச்சக்காடி பகுதியைச் சேர்ந்த கருப்பையாவின் மகன் என தெரியவந்தது.
விசாரணையில், சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்தார், வெகுநாள்களாக வேலைக்கு வராமல் இருந்த ஸ்டாலினை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவர் இரும்புக் கம்பியால் அவர்களை அடித்துக் கொன்று, சாரதாம்பாள் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்றதாகவும் தெரியவந்தது. போலீஸார், ஸ்டாலினை கைது செய்து, தாலிக்கொடியை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
.jpg)
0 comments:
Post a Comment