Sunday, May 03, 2015

பிரபல இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பான் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன், கோல்ட் அண்ட் சில்வர் ஸ்டார் விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் கல்வியாளர் கள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருது ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தியதற்காகவும், கல்வி அனுபவப் பரிமாற்றத்தை மேம்படுத்தியதற்காகவும் வழங்கப்படுவதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
இதுவரை 70 கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்ற ராவ், பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் பெங்களூருவில் இயங்கி வரும் ஜவாஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆய்வு மையத்தின் கவுரவ தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment