Monday, July 06, 2015
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டாக்டர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை மீட்டு தந்தது வைகோ என்பதை உலகம் அறிந்ததே. இந்த அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனை தடுத்து நிறுத்த, கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது அணைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு, வழக்கம் போல் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து மத்திய படை பாதுகாப்பை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
கேரளத்தின் சதி செயலுக்கு துணை போகும் விதத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களால் அபாயம் ஏற்படும் என்று அபாண்டமாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 7–ந்தேதி, மதுரை காளவாசல் சந்திப்பில் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment