Monday, July 06, 2015

On Monday, July 06, 2015 by Unknown in ,    
மதுரையில் வீட்டு போர்வெல் தண்ணீரை வீதியில் விட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: மேயர் நடவடிக்கை
வீட்டு போர்வெல் தண்ணீரை வீதியில் விட்ட 2 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்.
மதுரை 50–வது வார்டு வடக்கு மாரட் வீதியில் வசிப்பவர்கள் மதன்குமார், சந்தோஷ்குமார். இவர்கள் தங்கள் வீட்டிற்கு ஆழ்துளை கிணறு போட்டுள்ளனர். அப்போது வெளியான தண்ணீரை பொது சாலையில் விட்டதாக மாநகராட்சி மேயருக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின்பேரில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் நாராயணன் மேற்பார்வையில் செயற்பொறியாளர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது விதிமுறைகளை மீறி வீதியில் தண்ணீரை விட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்

0 comments: