Saturday, September 19, 2015
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்தில் ஓலை கூரைகள் அமைக்க கூடாது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மட்டுமே அமைக்க வேண்டும் என்று போலீசார் கூறி வந்தனர். அதற்கு போதிய கால அவகாசம் இல்லை. ஆகையால் அடுத்த ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் முள்ளக்காடு ராஜீவ்நகரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்காமல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் இந்து முன்னணி மண்டல பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் அந்த பகுதி இந்து முன்னணி நிர்வாகிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர்கள் சங்கர், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ராகவேந்திரா, மண்டலத்தலைவர் மாதவன், ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு போலீசார் அழைத்து சென்ற நிர்வாகிகளை விடுவித்தனர்.
இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர்கள் புகாரின் பேரில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக முத்தையாபுரம் போலீசார் இந்து முன்னணியினர் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment