Saturday, September 19, 2015
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்தில் ஓலை கூரைகள் அமைக்க கூடாது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மட்டுமே அமைக்க வேண்டும் என்று போலீசார் கூறி வந்தனர். அதற்கு போதிய கால அவகாசம் இல்லை. ஆகையால் அடுத்த ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் முள்ளக்காடு ராஜீவ்நகரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்காமல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் இந்து முன்னணி மண்டல பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் அந்த பகுதி இந்து முன்னணி நிர்வாகிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர்கள் சங்கர், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ராகவேந்திரா, மண்டலத்தலைவர் மாதவன், ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு போலீசார் அழைத்து சென்ற நிர்வாகிகளை விடுவித்தனர்.
இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர்கள் புகாரின் பேரில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக முத்தையாபுரம் போலீசார் இந்து முன்னணியினர் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment