Monday, October 12, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசுக்கடியால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் மற்றும் பிறநோய்கள் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்;ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் கொசுவானது பகல் நேரத்தில் கடித்து நோயினைப் பரப்பும் தன்மை வாய்ந்தது. எனவே பகல் நேரம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி அனைத்து மழலையர் , தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 13.10.2015 செவ்வாய்;க்கிழமையன்று பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சித் தலைவர்களின் உதவியைப் பெற்று இப்பணியினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும்.
பள்ளிகளில் தூய்மைப் பணியினை மேற்கொள்ளும்போது, மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவறை நீர்த்தொட்டிகளை சலவைசோடா (பிளீச்சிங் பவுடர்) கொண்டு நன்கு கழுவி காயவைத்த பின்னர் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பிடித்து வைக்கப்படும் நீர்நிலைத் தொட்டிகள் சரியாகப் பொருந்தும் மூடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகம் , சத்துணவு மையம் மற்றும் விடுதி அருகே பயன்படுத்தப்பட்டு களையப்பட்ட குவளைகள், பிளாஸ்டிக் பைகள் , தேங்காய் சிரட்டைகள் இருப்பின் அவற்றினை அகற்றிட வேண்டும். வளாகத்தில் உள்ள புதர்களில் கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பயன்பாட்டில் இல்லாத பழைய வாளிகள், கொள்கலன்கள், டப்பாக்கள் மற்றும் டயர்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாணாக்கர் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் தற்போது எடுப்பது போன்று உறுதிமொழியினை தொடர்ந்து எடுத்திட வேண்டும். மழைக்காலங்களில் மாணவ , மாணவிகள் ஈ மொய்த்த பண்டங்கள் உண்ணக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் பரவும் விதம் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment