Monday, October 12, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசுக்கடியால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் மற்றும் பிறநோய்கள் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்;ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் கொசுவானது பகல் நேரத்தில் கடித்து நோயினைப் பரப்பும் தன்மை வாய்ந்தது. எனவே பகல் நேரம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி அனைத்து மழலையர் , தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 13.10.2015 செவ்வாய்;க்கிழமையன்று பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சித் தலைவர்களின் உதவியைப் பெற்று இப்பணியினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும்.
பள்ளிகளில் தூய்மைப் பணியினை மேற்கொள்ளும்போது, மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவறை நீர்த்தொட்டிகளை சலவைசோடா (பிளீச்சிங் பவுடர்) கொண்டு நன்கு கழுவி காயவைத்த பின்னர் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பிடித்து வைக்கப்படும் நீர்நிலைத் தொட்டிகள் சரியாகப் பொருந்தும் மூடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகம் , சத்துணவு மையம் மற்றும் விடுதி அருகே பயன்படுத்தப்பட்டு களையப்பட்ட குவளைகள், பிளாஸ்டிக் பைகள் , தேங்காய் சிரட்டைகள் இருப்பின் அவற்றினை அகற்றிட வேண்டும். வளாகத்தில் உள்ள புதர்களில் கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பயன்பாட்டில் இல்லாத பழைய வாளிகள், கொள்கலன்கள், டப்பாக்கள் மற்றும் டயர்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாணாக்கர் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் தற்போது எடுப்பது போன்று உறுதிமொழியினை தொடர்ந்து எடுத்திட வேண்டும். மழைக்காலங்களில் மாணவ , மாணவிகள் ஈ மொய்த்த பண்டங்கள் உண்ணக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் பரவும் விதம் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment