Monday, October 12, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசுக்கடியால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் மற்றும் பிறநோய்கள் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்;ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் கொசுவானது பகல் நேரத்தில் கடித்து நோயினைப் பரப்பும் தன்மை வாய்ந்தது. எனவே பகல் நேரம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி அனைத்து மழலையர் , தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 13.10.2015 செவ்வாய்;க்கிழமையன்று பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சித் தலைவர்களின் உதவியைப் பெற்று இப்பணியினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும்.
பள்ளிகளில் தூய்மைப் பணியினை மேற்கொள்ளும்போது, மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவறை நீர்த்தொட்டிகளை சலவைசோடா (பிளீச்சிங் பவுடர்) கொண்டு நன்கு கழுவி காயவைத்த பின்னர் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பிடித்து வைக்கப்படும் நீர்நிலைத் தொட்டிகள் சரியாகப் பொருந்தும் மூடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகம் , சத்துணவு மையம் மற்றும் விடுதி அருகே பயன்படுத்தப்பட்டு களையப்பட்ட குவளைகள், பிளாஸ்டிக் பைகள் , தேங்காய் சிரட்டைகள் இருப்பின் அவற்றினை அகற்றிட வேண்டும். வளாகத்தில் உள்ள புதர்களில் கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பயன்பாட்டில் இல்லாத பழைய வாளிகள், கொள்கலன்கள், டப்பாக்கள் மற்றும் டயர்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாணாக்கர் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் தற்போது எடுப்பது போன்று உறுதிமொழியினை தொடர்ந்து எடுத்திட வேண்டும். மழைக்காலங்களில் மாணவ , மாணவிகள் ஈ மொய்த்த பண்டங்கள் உண்ணக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் பரவும் விதம் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...

0 comments:
Post a Comment