Monday, October 12, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசுக்கடியால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் மற்றும் பிறநோய்கள் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்;ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் கொசுவானது பகல் நேரத்தில் கடித்து நோயினைப் பரப்பும் தன்மை வாய்ந்தது. எனவே பகல் நேரம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி அனைத்து மழலையர் , தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 13.10.2015 செவ்வாய்;க்கிழமையன்று பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சித் தலைவர்களின் உதவியைப் பெற்று இப்பணியினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும்.
பள்ளிகளில் தூய்மைப் பணியினை மேற்கொள்ளும்போது, மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவறை நீர்த்தொட்டிகளை சலவைசோடா (பிளீச்சிங் பவுடர்) கொண்டு நன்கு கழுவி காயவைத்த பின்னர் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பிடித்து வைக்கப்படும் நீர்நிலைத் தொட்டிகள் சரியாகப் பொருந்தும் மூடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகம் , சத்துணவு மையம் மற்றும் விடுதி அருகே பயன்படுத்தப்பட்டு களையப்பட்ட குவளைகள், பிளாஸ்டிக் பைகள் , தேங்காய் சிரட்டைகள் இருப்பின் அவற்றினை அகற்றிட வேண்டும். வளாகத்தில் உள்ள புதர்களில் கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பயன்பாட்டில் இல்லாத பழைய வாளிகள், கொள்கலன்கள், டப்பாக்கள் மற்றும் டயர்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாணாக்கர் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் தற்போது எடுப்பது போன்று உறுதிமொழியினை தொடர்ந்து எடுத்திட வேண்டும். மழைக்காலங்களில் மாணவ , மாணவிகள் ஈ மொய்த்த பண்டங்கள் உண்ணக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் பரவும் விதம் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 

 
 
 
0 comments:
Post a Comment