Thursday, October 08, 2015
மதுரை: தனியார் பேருந்தின் அதீத வேகத்தினால் 3 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என காமராஜர் பல்கலை மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.
தேனி செல்லும் மெயின்ரோட்டில் காமராசர் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. முகப்பு நுழைவு வாயிலை ஒட்டினாற்போல் அமைந்திருக்கும் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பேய் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. வாகனம் மோதி இதுவரை பல மாணவர்கள் இறந்துள்ளனர். அங்கு ஒரு பாலம் போட்டு மாணவர்கள் நிம்மதியாக சென்று வர வழி ஏற்படுத்த வேண்டுமென்று மாணவர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகிறார்கள். ஆனால், பல்கலை நிர்வாகம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பி.பீ.குளத்தில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரியில் செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகள் கங்காதேவியும், கொடைக்கானலை சேர்ந்த ரபியத்துல் பசிரியா என்பவரும் 3–ம் ஆண்டு படித்து வந்தனர்.
இன்று காலை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வந்த ரபியத்துல் பசிரியா, தோழி கங்காதேவிக்காக பல்கலைகழக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது கங்காதேவி தனது தந்தை அன்பழகனுடன் டூவீலரில் அங்கு வந்தார். அங்கு மூவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற தனியார் பஸ், கண்ணிமைக்கும் நேரத்தில் டூவீலர் மீது பலமாக மோதியது. இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தூக்கி வீசப்பட்ட கங்காதேவியும் ரபியத்துல் பசிரியாவும் படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவிகள் 2 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ரபியத்துல் பசிரியா பரிதாபமாக இறந்தார். கங்காதேவியும் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தார்
இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தனியார் பஸ் டிரைவர் ஜெயராமை தேடி வருகின்றனர்.
மாணவர்களின் கோரிக்கை புறந்தள்ளப்பட்டு,
அதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவது மாணவர்களிடையே கொந்தளிப்பை
ஏற்படுத்திய நிலையில், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட
நிர்வாகத்தின் அலட்சியத்தால் 3 உயிர்கள் பலியான சம்பவம் மதுரையில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...



0 comments:
Post a Comment