Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
 
அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில்விடக் கோரி ரயில்வே உயரதிகாரியிடம் அபூர்வா ரயில் பயணிப்போர் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
  அருப்புக்கோட்டை ரயில் சந்திப்பில் ஆய்வுப் பணிக்காக திங்கள்கிழமை தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்க், மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளர் ஆர்.வி.எஸ்.பாபு நேரில் வந்தனர்.
 அவர்களை அருப்புக்கோட்டை வட்டார ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் (அபூர்வா சங்கம்) நேரில் சந்தித்து,அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் விடக் கோரி மனு அளித்தனர். அதற்கு பதிலளித்த ரயில்வே உயரதிகாரிகள் அருப்புக்கோட்டை சந்திப்பில் போதிய அளவிற்கு பயணிகள் போக்குவரத்தும் பண வசூலும் உள்ளதால் நிச்சயம் சென்னைக்கு ரயில்விட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன

0 comments: