Thursday, October 15, 2015
பல்லடம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்தளவே மழை பெய்தது. இதனால் விதைப்புப் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்படி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம், பொங்கலூர் பி.ஏ.பி.அலுவலகத்தில் 55 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் விதைப்புப் பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். நல்ல விலை கிடைப்பதால் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மழை பெய்ய துவங்கியுள்ளதால் மக்காச் சோள சாகுபடி அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment