Thursday, October 15, 2015
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகள் காவ்யா(13), இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் படிப்பு விஷயம் காரணமாக காவ்யாவின் தாய் லதாமணி, தந்தை சரவணன் இருவரும் அவரைக் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காவ்யா, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.600-யை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, காவ்யாவின் பெற்றோர், உறவினர்கள் திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே காவ்யா புதன்கிழமை நின்று கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் காவ்யாவை மீட்டு, அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவிநாசி போலீஸார் காவ்யாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment