Thursday, October 15, 2015
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகள் காவ்யா(13), இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் படிப்பு விஷயம் காரணமாக காவ்யாவின் தாய் லதாமணி, தந்தை சரவணன் இருவரும் அவரைக் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காவ்யா, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.600-யை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, காவ்யாவின் பெற்றோர், உறவினர்கள் திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே காவ்யா புதன்கிழமை நின்று கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் காவ்யாவை மீட்டு, அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவிநாசி போலீஸார் காவ்யாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment