Thursday, October 15, 2015
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகள் காவ்யா(13), இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் படிப்பு விஷயம் காரணமாக காவ்யாவின் தாய் லதாமணி, தந்தை சரவணன் இருவரும் அவரைக் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காவ்யா, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.600-யை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, காவ்யாவின் பெற்றோர், உறவினர்கள் திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே காவ்யா புதன்கிழமை நின்று கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் காவ்யாவை மீட்டு, அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவிநாசி போலீஸார் காவ்யாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment